deepamnews
இலங்கை

நுகர்வோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டம் – நளின் பெர்னாண்டோ அறிவிப்பு.

பொருள் ஒன்றை கொள்வனவு செய்யும்போது நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது குறித்த முறைப்பாட்டை முறைப்பாட்டு சபைக்கு முன்வைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் வழங்கும் முறைப்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கான இந்த புதிய செயல்முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, சட்ட உதவி ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு  

videodeepam

நீதித்துறைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா, சீனா, ஜப்பானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு – செஹான் சேமசிங்க தெரிவிப்பு

videodeepam