deepamnews
இலங்கை

நுகர்வோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டம் – நளின் பெர்னாண்டோ அறிவிப்பு.

பொருள் ஒன்றை கொள்வனவு செய்யும்போது நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது குறித்த முறைப்பாட்டை முறைப்பாட்டு சபைக்கு முன்வைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் வழங்கும் முறைப்பாடுகளை முறையாகக் கையாள்வதற்கான இந்த புதிய செயல்முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, சட்ட உதவி ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

வறுமையில் சிக்குண்டுள்ள இலங்கையர்கள் சொத்துக்களை விற்கின்றனர் – உலக உணவுத்திட்டம் அறிவிப்பு

videodeepam

வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினைந்தவது திருவிழாவாகிய தீர்த்ததோற்சவம் இன்று இடம்பெற்றது.

videodeepam

இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து கூற எரிக் சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – ரெலோ அறிக்கை

videodeepam