deepamnews
இலங்கை

முல்லைத்தீவு நீதிபதியின் இராஜினாமா –  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை.

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியின் இராஜினாமா தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 29 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அண்மைக் காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

குருந்தூர் மலை விவகாரத்துடன் தொடர்புடைய வழக்கு, கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு

videodeepam

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும் – மாவை சேனாதிராஜா!

videodeepam

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி – குடத்தனையில் சம்பவம்!

videodeepam