deepamnews
இலங்கை

புறக்கோட்டை தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு!

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, 9 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதன்போது, இந்த தீப்பரவலில் 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலவாக்கலை வட்டகொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமூக உறவுகளை மேம்படுத்தும் புத்தாண்டு: எதிர்க் கட்சித்தலைவர் சஜித் வாழ்த்துச் செய்தி

videodeepam

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலப்பின சூரிய கிரகணம்

videodeepam

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

videodeepam