deepamnews
இலங்கை

அப்பாவிகளைத் தண்டிக்காதே, குற்றவாளிகளைத் தப்பவிடாதே – அலெக்ஸுன் படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

அப்பாவிகளைத் தண்டிக்காதே, குற்றவாளிகளைத் தப்பவிடாதே – அலெக்ஸுன் படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸுக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் நேற்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்டவிரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் அராஜகத்துக்கு முடிவு கட்டு!”, “அப்பாவிகளைத் தண்டிக்காதே! குற்றவாளிகளைத் தப்பவிடாதே!!”, “வேலியே பயிரை மேய்கின்றதா?”, “எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்!”, “தடுப்புக்காவல் படுகொலைகளை நிறுத்து!” போன்ற பதா

Related posts

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி 

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam

உள்ளூராட்சி மன்ற  தேர்தல் தாமதமடையக்கூடும்  – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam