deepamnews
இலங்கை

வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

நுவரெலியா, கிரகரி வாவியிலிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்

சடலமாக மீட்கப்பட்ட நபர் நாவலப்பிட்டி கெடபுல்லா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய இராமன் பத்மநாதன் என அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related posts

வரவு செலவு திட்டத்துக்கு எதிராக  இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை

videodeepam

இன்று முதல் முறையாக கூடுகிறது தேசிய சபை

videodeepam

யாழில் மாவீரர் நினைவாலயம் திறப்பு – தமிழ் உறவுகள் திரண்டு வந்து அஞ்சலி.

videodeepam