deepamnews
இலங்கை

நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!

வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் இன்று (25) தெரிவித்தனர்.

குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய  பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள  கங்கையில் நிர்வாணமாகச் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட  ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது . இந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .

பேலியகொட 4 ஆம் மைல்  கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில்  ரயிலால் மோதுண்டு உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்துள்ளார். வலது கையில் பச்சை குத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் .

மாரவில பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் இனந்தெரியாத நபர் ஒவரின் சடலம் நிர்வாணமாக  மீட்கப்பட்டுள்ளது. 55 முதல் 60 வயதுடைய ஆணின் சடலமே  மீட்கப்பட்டுள்ளது.

ராகமை – கடவத்தை பகுதியில்  தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் சாம்பர் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்திருந்துள்ளார். உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Related posts

உதவித் திட்டங்களின்போது மலையக மக்களின் பெயர்கள் வெட்டப்படவில்லை – அமைச்சர் ஜீவன்  தெரிவிப்பு

videodeepam

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட 4வது நாடாக இலங்கை!!

videodeepam

இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது –  தமிழக அதிகாரியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

videodeepam