deepamnews
இலங்கை

நெடுந்தேவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு-செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு .

நெடுந்தீவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது அலுவலகத்தில் நடராத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நெடுந்தீவு என்பது பாரிய கடற்படை முகாம் ஒன்றுக்குள் மக்கள் இருப்பது போன்ற ஒரு சூழல் காணப்படுவதாகவும், அவ்வாறான நிலையில் எவ்வாறு அங்கு கடற்படைக்கு தெரியாமல் இவ்வாறான கொலை எவ்வாறு நடந்து இருக்கும் என்று தாம் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கொலை மூலம் இருக்கின்ற மக்களை நெடுந்தீவிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் தனக்கு எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

மே 09 சம்பவம் மீண்டும் தோற்றம்பெறும் – நளின் பண்டார தெரிவிப்பு

videodeepam

மின்சார சபை மறுசீரமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு – சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் வாக்குறுதி

videodeepam

கிளிநொச்சியில் புதையல் தேடி அகல்வுபணி!

videodeepam