சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்க படையினர், அமெரிக்க தூதரக பணியாளர்களை வெளியேற்றியுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
சூடானின் தலைநகரில் இருந்து தமது பணியாளர்கள் விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக குறித்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கை துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்று அதிகாலையிலிருந்து சுமார் 100 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.