deepamnews
இலங்கை

பொலிஸ் அதிகாரிகளை போல் செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது.

பொலிஸ் அதிகாரிகளைப் போல் செயற்பட்டு பல்வேறு பகுதிகளில் பணம், சொத்துகளைக் கொள்ளையிட்டமை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மில்லனிய, கஹதுடுவ, அங்குருவாதொட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல, பண்டாரகம பகுதிகளில் பணமும் சொத்துகளும் கொள்ளையிடப்பட்டடமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் சிலவற்றை வாளால் சேதப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் கடந்த 18 ஆம் திகதி ஹொரணை – பொக்குணுவிட்ட சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஏனைய 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மே 1 ஆம் திகதி முடங்கும்  கொழும்பு – ஜோசப் ஸ்டாலின்  மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

videodeepam

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

videodeepam

இலங்கையில் வறுமை நிலை இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி அறிக்கை

videodeepam