deepamnews
இலங்கை

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய சிலுவையை உடைத்த இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த  சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர்  ஒருவரைப் காவல்துறையினர் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

videodeepam

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

videodeepam

2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் விடுதலை

videodeepam