கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 28.07.2023வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குழாய் பகுதியில காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணியில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து அகழ்வு பணியை ஈடுபட்டு வருவதாக அதற்கு சர்வதேச முறைகளுக்கு அமைவாக நியாயமானதும் நீதியானதுமான அகழ்வு பணி இடம்பெற வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம்28.07.2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகள் பலத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் வரை அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து வடக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுள்ளது இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் கருத்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தனியார் பேருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டு மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாகவே காணப்பட்டது அத்துடன் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்