deepamnews
இலங்கை

கல்வி அமைச்சின் அறிவிப்பின் பேரில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு.

தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும்.இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் வளி மாசடைவதால் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை மனங்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையால் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதப் 7 ஆம் திகதி முதல் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கமைவாக கல்வி அமைச்சு இம்மாதம் இடம்பெறும் சர்வதேச தினங்களான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் ( செப்டெம்பர்-7), உலக ஓசோன் தினம் (செப்டெம்பர்-16)

ஆகியவற்றை பாடசாலைகளில் கொண்டாடி மாணவர் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைவாக வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இத்தினங்களைக் கொண்டாடுவதற்கான வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி யா/ வட்டு இந்துக் கல்லூரியிலும் பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்களால் இன்றயதினம் ( செப்டெம்பர் 7) இத்தினத்தை பற்றியும், தூய வளியை பெறல் தொடர்பாகவும் சகல மாணவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல  யா/பிரான்பற்று கலைமள் வித்தியாலயத்தில், புவியியல் பாட ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்தினார்.

Related posts

22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam

பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைது!

videodeepam

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை – கையை விரித்தார் ரணில்

videodeepam