deepamnews
இலங்கை

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பேருந்து கடந்த திங்கட்கிழமை பயணிகளை ஏற்றியவாறு சுற்றுலாவிற்கு சென்றது. இவ்வாறு சுற்றுலா சென்ற பேருந்து இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தது.

பேருந்தின் சாரதி , பேருந்தை உரிமையாளரின் வீட்டிற்கு முன்னால் உள்ள காணியில் நிறுத்தி விட்டு பேருந்தின் உரிமையாளருடன் கதைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு பாரிய சத்தங்களுடன் பேருந்து எரிய ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடற்றொழிலுக்கு செல்வதற்கு சென்ற இளைஞர்கள் பேருந்து எரிவதை அவதானித்த நிலையில் தீயினை அணைக்க முயன்றனர். இருந்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் பொலிஸார் தடயங்களை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வறட்சி காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்.

videodeepam

வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை – ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு.

videodeepam

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்.

videodeepam