deepamnews
இலங்கை

சீரற்ற காலநிலையால் தரையிறங்குவதில் குழப்பம்-மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம்.

யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்றுக் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் கைது!

videodeepam

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

videodeepam

தபால் திணைக்களத்தை போன்ற போலி இணையத்தளத்தினூடாக நிதி மோசடி.

videodeepam