deepamnews
இலங்கை

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி பாண் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர், என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கோதுமை மாவின் கையிருப்பு போதுமானளவு இருந்தால், பாண் விலையினை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் எவருமில்லை!

videodeepam

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam