deepamnews
இலங்கை

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி பாண் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர், என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கோதுமை மாவின் கையிருப்பு போதுமானளவு இருந்தால், பாண் விலையினை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஆசியாவின் சிறந்த விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையங்களில் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் – ஜனாதிபதி

videodeepam

இலங்கையில் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்கிறார் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

videodeepam