காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் வரை பணயக்கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான போர் நிறுத்தம் குறித்து கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் பல தடவைகள் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோதலின் ஆரம்பத்தில் இருந்து, 240 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் சிறைப்பிடிக்கப்பட்டு, அவர்களில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் காசாவில் உணவுப்பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது.