deepamnews
இலங்கை

வவுனியா – திருமலை வீதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.

வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப் புறமாக ஹெப்பற்றிக்கொல்லாவ பகுதியிலேயே இந்தச் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க இந்த முதியவர் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளது எனவும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேற்படி நபர் வவுனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பற்றிக்கொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை நிகழ்த்தவுள்ளார்

videodeepam

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பம்

videodeepam

மக்களின் வேதனை அறிந்தே அரசியலுக்கு வந்தேன் ; சாணக்கியன் போன்றவர்களுக்கு பொருந்தாது – அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு

videodeepam