deepamnews
இலங்கை

மக்களின் வேதனை அறிந்தே அரசியலுக்கு வந்தேன் ; சாணக்கியன் போன்றவர்களுக்கு பொருந்தாது – அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு

நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு  இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனது 30 வருட அரசியல் வாழ்க்கை கடக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் இன்றும் அரசியலில் செய்யப்பட்டிருக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சு சார்ந்து  பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

நான் எழுந்து என்ன பிரச்சனையை தீர்க்கவில்லை கூறுங்கள் பார்ப்போம் என கூறிய போது அவர் மௌனமாக இருந்தார் என்னிடம் நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும்போது பிரச்சினைகளை கூறுங்கள் தீர்வு காண்போம் எனத் தெரிவித்திருந்தேன்.

சாணக்கியன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சிலர் மக்கள் அனுபவித்த துன்பங்கள் வேதனைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது மக்கள் பிரச்சனையை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சனைகளை தீராப் பிரச்சனையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர் பாராளுமன்றத்தில், மட்டக்களப்பில் தற்போது அரசியல் கட்சிய அலுவலகம் அமைத்து செயற்படுவதாக கூறியிருந்தார்.

அவருக்கு சிலவேளை தெரியாமல் இருந்திருக்கலாம் 90க்கு பிற்பட்ட காலங்களில் மட்டக்களப்பில் எமது அலுவலகம் திறப்பு செய்யப்பட்ட நிலையில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தபோது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார்.

இதை பற்றி அறிந்திடாத  சாணக்கியன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேர்தலில் இறங்கினார்  பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் இறங்கினார். நாளை இன்னோரு கட்சியிலும் தேர்தலில் இறங்கலாம்.

ஆனால் போராட்ட இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய எங்களிடம் கொள்கை இருக்கிறது ஆனால் இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் நானும் பங்கு எடுத்தவன் என்ற வகையில் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

என்னுடன் போராடிய சக இயக்கங்களைச் சேர்ந்த  செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவனேசதுரை சந்திரகாந்தன் போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆரம்ப அரசியல் தீர்வான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.

ஆகவே தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சனைகளைத் தீராப் பிரச்சினையாக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜெனிவாவில் தீர்மானம் மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோரும்.- அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam

ஜேர்மனிக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

videodeepam

 IMF இன்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை விவாதம் இம்மாத இறுதியில்

videodeepam