deepamnews
இலங்கை

திரிபோஷாவில் விசத்தன்மை – 2 நிறுவனங்கள் அறிக்கை

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷாவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உரிய குறியீட்டின்படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷா சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

டிசெம்பருக்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமில்லை –  சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

videodeepam

படிப்படியாக வலுவிழக்கும் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

videodeepam

தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிப்பு ..

videodeepam