மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (3) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் வாணிவிழா பூஜையும் அதனை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/DSC_0961.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/DSC_1006.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/DSC_1007.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/DSC_0981.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/DSC_1029.jpg)