deepamnews
இந்தியா

விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன்  தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு,  மத்திய அரசுகளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன்  ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ம் திகதி உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்,  ‘சிறையில் நன்னடத்தையுடன் இருக்கிறோம். வெளியே வந்தாலும் எங்களால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

அதனால், பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என தனித்தனியாக கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் கவாய், நாகரத்தனா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related posts

தீவிரமடையும் மணிப்பூர் கலவரம் –  மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி

videodeepam

பிரதமர் மோடி ஒரே ஆடையை மீண்டும் அணிந்து பார்த்ததுண்டா? – ராகுல் காந்தி கேள்வி.

videodeepam

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் -நரேந்திர மோடி தெரிவிப்பு.

videodeepam