deepamnews
இலங்கைசர்வதேசம்

தென் கொரியாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இலங்கை பிரஜையும் உயிரிழப்பு

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் நடைபெற்ற களியாட்டம் ஒன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

videodeepam

முன்னாள் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு விளக்கமறியல்.

videodeepam

தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – நடிகை தமிதா அபேரத்ன அறிவிப்பு

videodeepam