deepamnews
இலங்கை

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்கிறார் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர்.

பின்னர் அந்த எண்ணிக்கை 110ஆக குறைக்கப்பட்டது.

அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நிதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த எண்ணிக்கை 60ஆக குறைந்தது.

இந்தநிலையில் தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர்.

குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம்  28.07.2023வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டது.

videodeepam

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றுமுதல் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

videodeepam

பிரதமரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam