deepamnews
இலங்கை

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

பள்ளி மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவர் சுகவீனத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாணந்துறை பிங்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போலி கடவுச்சீட்டில் நாட்டுக்குள் நுழைந்த சீன பிரஜை – இராஜாங்க அமைச்சர் தலையீட்டினால் விடுவிப்பு!

videodeepam

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் வாக்கெடுப்பு

videodeepam

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம்

videodeepam