பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அறிவித்தார்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2024/02/22-62c9113d2fce0.jpg)
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அதன் நட்டத்தை லிட்ரோ நிறுவனம் தாங்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை எனவும் லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.