deepamnews
இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.  

எதிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர். சில கட்சிகள் மற்றும் தனியாட்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் சிலர் எதிர்காலத்தில் இணைவார்கள்.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலை பரந்த கூட்டணியாக எதிர்கொள்ளவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.

எனவே அதிலிருந்து ஒருவரை மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கு கிழக்குப் பகுதியில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது! – அதை எதிர்பதற்கு தயார் என்கிறார் செல்வம்.

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என இன்னும் தீர்மானமில்லை – ஆர்.சம்பந்தன் தெரிவிப்பு

videodeepam

சுமந்திரன், சாணக்கியனை பின்தொடரும் புலனாய்வாளர்கள்

videodeepam