deepamnews
இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 3 முக்கிய அரச நிறுவனங்கள் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகிய அரச நிறுவனங்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, முன்னர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்து,தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, தற்போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களமும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Related posts

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாவிட்டால் போராட்டங்கள் தொடரும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

videodeepam

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

videodeepam