deepamnews
இலங்கை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொலிசார் அடாவடித்தனம், 6 பேர் கைது

கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிசார் அடாவடித்தனமாக நடந்து கொண்டதால், அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அரகலய ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், நேற்று மாலை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்தவொரு அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பதாதைகள் எவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கவில்லை.

எனினும் அவர்கள் கடந்த மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டனர்.

கடந்த ஆர்ப்பாட்டக் காலங்களில் வெவ்வேறு காரணிகளால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கும் ,மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துவதற்காகவுமே தாம் கூடியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது பெருமளவில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு முயற்சித்த போது, அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

தனது பெண் குழந்தையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிசார்  நடவடிக்கை எடுத்த போது அங்கிருந்தவர்கள் அதற்கு இடமளிக்காமல் அவர்களுடன் முரண்பட்டனர்.

இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பொதுமக்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி!

videodeepam

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து: எதிர்க்கட்சித் தலைவர் தகவல்

videodeepam

வவுனியா இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை.

videodeepam