deepamnews
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

அரச சேவையாளர்களுக்கான வேதனத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி செலுத்த முடியும் – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவிப்பு

videodeepam

தமக்கு உழைத்து தரவேண்டிய பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு .

videodeepam

பௌத்தத்துக்கு புலிகள் பாதுகாப்பே தந்தனர் – வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

videodeepam