deepamnews
இலங்கை

யாழ் வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்த போது, ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரை காப்பாற்ற அடுத்த இளைஞரும் கிணற்றில் குதித்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த ஏனைய இளைஞர்களால் ஊரவர்களை உதவிக்காக அழைத்து கிணற்றில் இருந்தவர்களை மீட்டு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

தவறை திருத்திக்கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பது தான் வெட்கம் – மகிந்த

videodeepam

சீனியின் விலை 240 ரூபாவாக அதிகரிப்பு

videodeepam

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் மீட்பு.

videodeepam