deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு – பட்டப் பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.

நேற்று  மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஹர்த்தாலுக்கு ஆதரவு தருமாறு ரெலோ இளைஞர் அணி அழைப்பு

videodeepam

எந்த தரப்பின் பின்னாலும் நாங்கள் செல்லமாட்டோம் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

videodeepam

வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று –  மாலை 5 மணியுடன் விவாதங்கள் நிறைவு

videodeepam