deepamnews
சர்வதேசம்

ரஷ்யா மீதான 400க்கும் அதிகமான யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதி தெரிவிப்பு

ரஷ்யா யுக்ரைனின் கெர்ஷன் பகுதியில் விட்டுச் சென்ற 400க்கும் அதிகமான மறைக்கப்படாத யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக யுக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கெர்ஷன் பகுதியில் ரஷ்ய படையினர் வெளியேறிய பின்னர், அங்கு பொதுமக்கள் மற்றும் படையினரின் சடலம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், யுக்ரைன் அதிகாரிகள் கெர்ஷன் நகருக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், பயணத் தடையையும் விதித்துள்ளனர்.

ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது.

எந்தவொரு சந்தேகமும் இன்றி குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து புச்சா, இஸியம் மற்றும் மரியபோல் ஆகிய நகரங்களில் இருந்து மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

போராட்டத்தில் பங்கேற்ற 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கியது ஈரான்

videodeepam

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 9 பேர் பலி  – 18 பேர் காயம்

videodeepam

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீதான தடைகளை கடுமையாக்கியுள்ள ஜப்பான்

videodeepam