deepamnews
இலங்கை

யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

யாழ். மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குளிர்சாதனப் பெட்டியில் சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்தனர்.

Related posts

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காலக்கெடு – சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

videodeepam

புத்தாண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு

videodeepam

வறுமையிலும் தங்கம் வென்று சாதித்த மடுப்பிரதேச மாணவி!

videodeepam