deepamnews
இலங்கை

மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள் – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன.

அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

பாடசாலைகளின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் சேதங்களை சீர்செய்து பாடசாலைகளை உடன் இயக்கி மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்தை பொறுத்தவரை பதுளை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் நான் தொடர்புகளை ஏற்படுத்தி, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நட்ட ஈட்டை வழங்கவும், உலர் உணவுப் பொருட்களையும் வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன்.

கடும் காற்றின் காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ள வீடுகளை திருத்தி வழமை நிலைக்கு கொண்டு வர வெறும் 10 ஆயிரம் ரூபாய் பணம் போதுமானதாக இல்லை என்பது நாமறிந்த விடயம்.

ஆனால் அனர்த்த நிலைமையின் போது செயற்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையின் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு 10ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்க முடியாத நிலைமை உள்ளது.

இந்தநிலையில் குறித்த வீடுகளை முழுமையாக திருத்தம் செய்து வழமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தேவையான நிதியைப் பெற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.

அதனடிப்படையில், இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் துரிதமாக மேற்கொள்வதற்கு உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

Related posts

மன்னார் இரணை இலுப்பை குளத்தில் இஞ்சி அறுவடை விழா

videodeepam

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

videodeepam

நவாலியில் வாள்வெட்டு – இருவர் மருத்துவமனையில் அனுமதிப்பு

videodeepam