deepamnews
இந்தியா

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்களை குடித்த 66க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், மெய்டென் மருந்தியல் நிறுவனத்தின் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழக அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் – நாளை பதவியேற்பு இடம்பெறவுள்ளது

videodeepam

ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிட்டால்  அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்! – சீமான் உறுதி.

videodeepam

தூத்துக்குடி இலங்கைக்கு இடையில் கப்பல் சேவை – நிறுவனங்கள் விருப்பம்

videodeepam