deepamnews
இலங்கை

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இணைந்து புதிய கூட்டணி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை  அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து இன்று காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கரவெட்டி  நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் விபத்து – நால்வர் காயம்

videodeepam

இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை –  பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

videodeepam

வெடுக்குநாறி ஆலய வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை

videodeepam