deepamnews
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விலை குறைக்கப்படும் உணவுப்பொருட்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலொன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை!

videodeepam

தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஜனாதிபதி!

videodeepam

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

videodeepam