deepamnews
இலங்கை

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு – நேற்று முதல் நடைமுறை

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட பணட வரியை 20 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கைதடியில் கோர விபத்து – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

மக்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது

videodeepam