deepamnews
இலங்கை

கைதடியில் கோர விபத்து – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று  இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின்  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார். இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.

உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

videodeepam

போலி விசாவை பயன்படுத்தி  கனடா செல்ல முயன்றவர் கைது.

videodeepam

இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்.

videodeepam