deepamnews
இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை மார்ச் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் கடந்த 07, 08 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கையாண்ட முறைமை குறித்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ளவே அமைச்சர் டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

videodeepam

ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை!

videodeepam

இலங்கை இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் – ஜுலி சங்!

videodeepam