deepamnews
இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை மார்ச் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் கடந்த 07, 08 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கையாண்ட முறைமை குறித்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ளவே அமைச்சர் டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

videodeepam

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எரிபொருள் விலை குறைப்பு

videodeepam