தெற்காசியாவிலேயே ஊழலுக்கு எதிரான சிறந்த சட்டத்தை இவ்வருடத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஊடக நிறுவனங்களின் செய்தித் திணைக்களத் தலைவர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.