deepamnews
இலங்கை

இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் உதவி – உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்

மேலும் இரு வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கைக்கு 07 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தே இந்த கடன் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீண்ட கால கடன் வசதிக்கு அனுமதி கிடைத்தன் பின்னர் மீண்டும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சட்டரீதியாக விற்பனை செய்யப்படும் மதுபான வகைகள் மற்றும் சிகரெட் விற்பனை 30 முதல் 40 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அத்தியாவசிய செலவினங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

videodeepam

மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பாதுக்க காணி பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் தெரிவிப்பு

videodeepam

இந்தியாவின் இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம்

videodeepam