deepamnews
இலங்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் இன்றுமுதல் சோதனை

குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்தாமல் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களை சோதனை செய்யும் வேலைத்திட்டம் இன்று முதல் மேல்மாகாண வீதிகளில் ஆரம்பமாகியுள்ளது.

பஸ் கட்டணப் பதிவேட்டை பயணிகள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டன. பின்னர் பிரதேச செயலகத்தினால் திருத்தப்பட்ட ஆவணம் பஸ் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

Related posts

தந்தையும், மகனும் ஆற்றில் மூழ்கிப் பலி.

videodeepam

ஊழல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

videodeepam

கல்வியங்காடு பழக்கடை வியாபாரி கடத்தல் – அதிரடியாக அறுவர் கைது!

videodeepam