வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அங்கு அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.