பாலஸ்தீனின் வடக்கு மற்றும் மேற்கில் ஜெனின் முகாம்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இது பல விமானத் தாக்குதல்களுடன் முன்னெடுப்பட்டுள்ளது.
குறித்த வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனின் முகாமை மறைவிடமாகப் பயன்படுத்தி பாலஸ்தீனியர்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் போது, அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனின் ஜெனின் முகாம் பயங்கரவாத கோட்டை என்றும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.