deepamnews
இலங்கை

சேற்றில் புதைந்து உயிருக்கு போராடும் யானையை மீட்கும் பணிகள் தீவிரம்!

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்திள்ளார்.

இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

videodeepam

ரயில் கட்டணத்தில் மாற்றம் –  பந்துல குணவர்தன தெரிவிப்பு

videodeepam

கற்பக விருட்சத்தின் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

videodeepam