deepamnews
இலங்கை

காரைநகரில் சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் உயிரைவிட முயற்சி!

சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட ஒருவரைப் பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் காரைநகரில் நடந்துள்ளது.

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மனைவியின் சகோதரியின் மகளைத் துஷ்பிரயோகம் செய்தார் என்றே சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோதே அவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என்று கூறப்படுகின்றது. சந்தேகநபருக்கு மருத்துவமனையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

Related posts

கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார் ஆளுநர் அனுராதா யஹம்பத் – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு

videodeepam

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் !

videodeepam