deepamnews
சர்வதேசம்

அமெரிக்க ஜனாதிபதி ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இந்தியா செல்கிறார் என கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொவிட் பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டில்லியில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

ஜோ பைடனுக்கு கொவிட் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும்ம் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிப்பு!

videodeepam

திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுக்குத் தடை – இந்தோனேஷிய நாடாளுமன்றில் சட்டமூலம் நிறைவேறியது

videodeepam

அமெரிக்காவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல் – புடின் பகிரங்க எச்சரிக்கை

videodeepam