வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.